
கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டின் அருகே விளையாடு கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் ராஜேந்திரன் என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
அவர் மீது சிவகங்கை கோட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை சிவகங்கை போக்ஸோ சிறப்பு கோர்ட் விசாரணை நடத்தி வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட முதியவர் ராஜேந்திரனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 5 லட்சமும் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.