
மும்பையில் 29 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் 46 வயதான நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் லிவ் இன் டுகெதர் உறவில் இருந்துள்ளனர். அப்போது அந்த நம்பருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதனால் அந்தப் பெண் தங்களது உறவை முறித்துக் கொள்ள முடிவெடுத்தார். ஆனால் அந்தப் பெண்ணின் அந்தரங்க வீடியோவை எடுத்து வைத்த அந்த நபர், அதனை காட்டி உறவை தொடர மிரட்டியுள்ளார். இதேபோன்று பலமுறை அந்த வீடியோக்களை காட்டி அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின்படி அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் மேல் கண்டா விவரங்கள் தெரியவந்தது. இந்நிலையில் தான் கைது செய்யப்படாமல் இருக்க அந்த நபர் முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடினார். அப்போது அவர்கள் இருவரும் லிவிங் டுகெதர் உறவை 11 மாதங்கள் அதாவது ஆகஸ்ட் 1 2024 முதல் ஜூன் 30 2025 வரை தொடர அந்தப் பெண் ஒப்பதம் செய்துள்ளதாக ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பத்தார். அந்த அக்ரீமெண்டில் பெண்ணின் கையெழுத்து இருப்பதாக அந்த நபரின் வக்கீல் வாதாடினார். எனவே இது ஆதாரமாக ஏற்றும், சம்பந்தப்பட்ட பெண் அந்தரங்க வீடியோக்களுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.