
பாகிஸ்தான் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலானோர் அப்பாவி மக்கள்தான். இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் பெரும் கண்டனத்திற்குரியது.
உள்நாட்டு தோல்விகளுக்கு பக்கத்து நாடுகளை குறை சொல்வது பாகிஸ்தானின் வழக்கம் தான் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மீது குண்டு வீசியது. இதில் 46 பேர் உயிரிழந்தனர் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் தான். பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்று ஆப்கானிஸ்தான் கூறியிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பகுதியில் உங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.