சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெருகின்றனர். இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த திட்டத்திற்கான 70 ரயில்கள் தயாரிக்க VEML நிறுவனத்திற்கு ரூபாய் 3657.53 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்ட பெட்டிகள் கடந்த அக்டோபர் மாதம் பூந்தமல்லி டிப்போவிற்கு தனித்தனியாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இவை அனைத்தும் அங்கு வைத்து இணைக்கப்பட்டு முதல் கட்ட சோதனை அனுப்பப்பட்டது.

இந்த ரயில் திட்டம் 118.9 கிலோமீட்டர் தொலைவிற்கு செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்த டிரைவர் இல்லா ரயிலை பூந்தமல்லி போரூர் இடையிலான4வது பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ரயில்களில் எந்த ஒரு கோளாறும் இல்லாமல் இருக்க மற்றும் பயணிகள் கையாளும் திறன் கொண்டதாக இருப்பதையும் உறுதி செய்ய சோதனை ஓட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி கூறியதாவது, டைனமிக் சோதனை மற்றும் சோதனை ஓட்டங்கள் இந்த வாரத்தில் துவங்கியது. இது வருகிற 2026ம் ஆண்டு டிசம்பர் மாதம் பூந்தமல்லியில் இருந்து போரூருக்கு பயணிகள் பயணிக்க தயாராக இருக்கும். அதுவரை இந்த சோதனைகள் தொடரும். இந்த ரயில் சோதனை ஓட்டம் மணிக்கு 10 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை டெப்போவிலும், 40 கிலோமீட்டர் முதல் 80 கிலோமீட்டர் வரை பூந்தமல்லியில் இருந்து போரூருக்கும் சோதனை செய்யப்பட உள்ளது. இந்த சோதனையின் போது பிரேக்கிங் சிஸ்டமும் சோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.