
உத்திரபிரதேச மாநிலத்தில் மான்போர்டு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மான்வி சிங் என்ற 9 வயது மாணவி 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி சம்பவ நாளில் சக மாணவிகளுடன் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுது உயிரிழந்துவிட்டார்.
அதாவது விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் கவனத்திற்கு சென்ற நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுவயதில் மாரடைப்பு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.