இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் தனது இரு கைகளையும் கீழே வைத்தபடி தலைகீழாக நிற்கிறார். இதனை கடற்பறவை ஒன்று அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது. அவர் தொடர்ந்து தலைகீழாக நிற்கிறார். இதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த கடற்பறவை திடீரென்று மிகவும் வேகமாக உயரமாக பறக்கிறது.

அதன் பின் மனிதன் சிரிப்பதைப் போல சத்தமிடுகிறது. இதனை பார்த்த வாலிபர் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.