தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் பின் ஜூன் 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கும் நாள் அன்று பாட புத்தகங்களை விநியோகிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக மாணவர்களுக்கு அளிப்பதற்கான விலையில்லா பாடப் புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் பள்ளிகள் திறக்கும் நாளன்று மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கவும், வழங்க முடியாதோருக்கு அடுத்த நாளில் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.