திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பகுதியில் டெய்லரான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீரிக்ஷயா(13) பாளையங்கோட்டையில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை வீட்டு அறையில் ஸ்ரீரிக்ஷயா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.