எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சொத்தை அடிப்படையாகக் கொண்ட கான்ட்ரா பண்ட் திட்டம் இருக்கிறது. இந்தத் திட்டம் ஒரே வருடத்தில் 100% வளர்ச்சியை எட்டியுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதியிலிருந்து 2022 ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை ஒப்பிடுகையில் ரூ. 2,397.73 கோடியிலிருந்து ரூ. 4687.76 கோடியாக AUM திட்டமானது உயர்ந்துள்ளதாக எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ. 5000 ஆகும்.

அதன் பிறகு குறைந்தபட்ச எஸ்பிஐ முதலீட்டு தொகை ரூ. 500 ஆகும். அதிகபட்ச முதலீட்டு தொகை‌ ரூ. 1000 ஆகும். குறைந்தபட்ச வைப்பு தொகை ரூ. 1000 ஆகும். குறைந்தபட்சம் எடுக்கும் அளவு ரூ. 500 ஆகும். 365 நாட்களுக்குள் திட்டத்திலிருந்து வெளியேறினால் வெளியேற்ற கட்டணமாக 1 சதவீதம் வசூலிக்கப்படும். கடந்த 3 வருடங்களில் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ரூ. 10000முதலீடு செய்தவர்கள் ரூ. 2.28 லட்சம் லாபம் ஈட்டி இருப்பார்கள். எஸ்பிஐ காண்ட்ரா பண்டின் வருடாந்திர வருமானம் 30 சதவீதமாக இருக்கிறது. இதன் முழுமையான வருமானம் கிட்டத்தட்ட 120 சதவீதமாக இருக்கிறது. மேலும் ம்யூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன்பாக உங்கள் ஆலோசகரிடம் கேட்டு அறிந்து சுய விருப்பத்தின் பெயரில் முதலீடு செய்ய வேண்டும்.