ரயிலில் பயணிக்கும் பயணிகள் பலர் ரயிலின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டும், படிக்கட்டுகளில் உட்கார்ந்து கொண்டும் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் அந்தப் பயணத்தின் ஆபத்தை பலரும் அறிவதில்லை.

ஆனால் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோவில் ஐந்தறிவுள்ள நாய் ஒன்று படிக்கட்டுகளில் பயணிப்பவர்களை எச்சரிப்பது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் நாய் ஒன்று ஓடி கொண்டிருக்கும் ரயிலில் படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பவர்களை குரைத்து உள்ளே செல்லுமாறு அறிவுறுத்துகிறது.

ஒவ்வொரு பெட்டியாக ஓடிச் சென்று கவனித்து எச்சரிக்கிறது. இச்சம்பவம் பார்ப்போரை வெகுவாக ஈர்த்துள்ளது. மேலும் மனிதர்கள் கூட ஆபத்தை உணர்வதில்லை .

ஆனால் ஒரு நாய் பயணிகளை காக்கும் பணியில் சம்பளம் இல்லாமல் வேலை செய்வது நெகிழ வைக்கிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் அந்த நாய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.