
நாட்டின் 74வது குடியரசு தினத்தினையொட்டி பத்மஸ்ரீ விருது பெறுபவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் எம்.சி.தவார்(77) என்பவரும் இடம்பெற்றுள்ளார். இதுபற்றி டாக்டர் தவார் கூறியதாவது, கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு.
ஆனால் அதற்கு கால தாமதம் ஏற்படலாம். அதற்கான பலனே இந்த விருது ஆகும்” என்று அவர் கூறினார். 1967-ம் ஆண்டில் ஜபல்பூரில் மருத்துவம் தேர்ச்சி பெற்ற அவர், இந்தியா, பாகிஸ்தான் போரின் போது இந்திய ராணுவத்தில் ஓராண்டாக பணியாற்றியுள்ளார். இதையடுத்து 1972ம் ஆண்டு முதல் ஜபல்பூரில் மக்களுக்கு ரூபாய்.2 என்ற கட்டணத்தில் சுகாதார சேவையை வழங்க துவங்கினார். இப்போது தவார் ரூபாய்.20 கட்டணம் பெற்றுக் கொண்டு சிகிச்சையளித்து வருகிறார்.