உத்திரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை 22 வயது நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அந்த சிறுமியை கடுமையாக தாக்கி கை மற்றும் கால்களை கட்டி வயல்வெளியில் வீசிவிட்டு அந்த நபர் தப்பி சென்றுள்ளார். பின்னர் சிறுமி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடந்த திங்கள்கிழமை குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். பின்னர் சிறுமியின் உடல் உடற்கூறு பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதான நபர் மீது ஏற்கனவே போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இதை கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.