மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவரான பிறகு அமெரிக்காவுக்கு இதுவே அவருடைய முதல் பயணம். இந்நிலையில் அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசிய சில கருத்துக்களுக்கு பாஜகவினர் படும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சம்பித் பத்ரா கூறியதாவது, ராகுல் காந்தி அமெரிக்காவில் “தேச துரோகம்” செய்துள்ளார்.

அவர் அமெரிக்காவில் இந்தியாவை குறித்து முன் வைத்துள்ள பின்பத்தால் ஒட்டுமொத்த நாடும் புண்ப்பட்டுள்ளது. ஜாதிக்கு எதிராக ஜாதியையும், மதத்திற்கு எதிராக மதத்தையும் வெளிநாட்டில் சீக்கியர்களை பற்றி மோசமான கருத்துக்கள் கூறப்பட்டால் அது தேச துரோகம் என்று அழைக்கப்படும். வெளிநாட்டில் இந்தியாவை சரியான கண்ணோட்டத்தில் முன்னெடுத்த தெரியாதவர்களை குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. காந்தி ஆட்சிக்கு வந்ததிலிருந்து காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து வருகிறது என்று கூறினார்.