
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸ் ஷிப் கோப்பையை 27 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா அணி வென்றுள்ளது. அந்தப் இறுதிப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
மேலும் அந்த போட்டியில் ரபாடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியை வெற்றி பெற செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா கூறியதாவது, ரபாடா ஒரு அசாத்தியமான வீரர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் “ICC Hall of fame” என்ற அறிமுகம் விழா ஒன்று நடந்தது. அதில் கலந்து கொண்டேன். இன்னும் சில ஆண்டுகளில் ரபாடாவும் அதில் இணைந்து விடுவார், என புகழ்ந்து பாராட்டினார்.