தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக விபத்து நடந்து ஊழியர்கள் உயிர்பலியாவது அவ்வப்போது நடந்து வரும் நிலை உள்ளது. இதனால் மத்திய,மாநில அரசுகள் ஏதேனும் உதவி வழங்க கோரிக்கை வைத்துள்ளோம் . இந்நிலையில் இறந்த தொழிலாளர்களுக்கு கதாநாயகர்கள் சார்பில் இழப்பீடு தொகை  கொடுக்கப்பட்டாலும் அவர்களின் மறைவு அந்த படக்குழு மற்றும் சினிமா துறை ஆகியவை  பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் மற்றும்  ஐயர்கண்டிகையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் லைட் மேன் குமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார்கள்.

எனவே திரைப்படத் தொழிலாளர்களுக்கு உதவி வழங்கும் நோக்கில் வருகிற மார்ச் 19-ஆம் தேதி  ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி நடத்த முடிவெடுத்துள்ளோம் என்றார். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படுகின்ற நிதி மற்றும் நன்கொடை ஆகியவை பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய பயன்படுத்தப்படும். இது சிறிய பட்ஜெட் படங்கள் உட்பட அனைத்து படங்களில் பணிபுரிவோருக்கும் பொருந்தும்” என்று கூறினார்.