
மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் 2025 ஆம் ஆண்டுக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 13 ஆவது உலக கோப்பை போட்டியில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தத் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறும்.
அந்த போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்க உள்ளது. சமீபத்தில் நடந்த ஆண்களுக்கான சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததை தொடர்ந்து, தற்போது பெண்களுக்கான சாம்பியன்ஸ் தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதனால் பாகிஸ்தானுக்கான ஆட்டங்கள் அனைத்தும் கொழும்பில் நடைபெறும். மேலும் இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் ஆகியன. இதனைத் தொடர்ந்து இந்தப் போட்டிக்கான மைதானங்களையும் ஐசிசி அறிவித்துள்ளது.
அதன்படி இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் முதல் போட்டி பெங்களூருவில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி அறைஇறுதிக்கு தகுதி பெற்றால் அரை இறுதிய முதல் போட்டி கொழும்பில் நடைபெறும். இல்லையெனில் கவுகாத்தியில் நடைபெறும். இறுதிப் போட்டி பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்புவில் நடைபெறும் இல்லை எனில் பெங்களூருவில் நடைபெறும் என அறிவித்துள்ளது.