அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் கீழ் 37,45 அரசு பள்ளிகள் இயங்குகிறது. இதில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் வேலை பார்க்கின்றனர்.

இவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடைபெறும். அதன்படி 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 19ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் மொத்தம் 80 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி அனுமதி வழங்கப்படாது. மாறாக தற்செயல் விடுப்பு எடுத்துக்கொண்டு கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.