
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பள்ளியில் 12 வயது சிறுமி படித்து வருகிறார். அந்த பள்ளியில் 38 வயதுடைய நபர் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்க்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி சிறுமி மட்டும் வகுப்பறையில் தனியாக இருந்தார். அப்போது உடற்கல்வி ஆசிரியர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து கட்டிபிடிக்குமாறு கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை துன்புறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் உடற்கல்வி ஆசிரியரை கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.