
வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி சமீபத்தில் நடைபெற்று வரும் குளிர் கால கூட்டத்தொடரில் பங்கேற்றார். இதுவே இவரது முதல் கூட்டத்தொடர் ஆகும். இந்தக் கூட்டத் தொடரின் போது தான் பிரியங்கா காந்தி எம்.பியாக பதவியேற்றார். கூட்டத்தொடர் தொடங்கிய முதலே இன்று தான் பிரியங்கா காந்தி கூட்டத்தொடரில் முதல் முறையாக பேசினார். முதல் பேச்சிலேயே தங்கள் கட்சி ஆளும் இமாச்சல மாநிலத்தை குறித்து விமர்சித்து பேசியுள்ளார். கூட்டுத்தொடரில் பிரியங்கா காந்தி கூறியதாவது, ஒரு நபருக்காக அனைத்து குளிரூட்டப்பட்ட ஸ்டோரேஜ்களையும் அதானிக்கு வழங்கியுள்ளது.
உத்திரபிரதேச ஆப்பிள் உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். ஒருவருக்கு சாதகமாக அனைத்தும் மாற்றப்படுகிறது. மீதமுள்ள 142 கோடி இந்தியர்களும் இதற்காக புறக்கணிக்கப்படுகிறார்கள். ஒருவருக்கே ரயில்வே, விமான நிலையம் என அனைத்தும் கொடுக்கப்படுகிறது என்றார். இதுகுறித்து பாஜக தலைவர் மாள்வியா விமர்சித்து கூறியதாவது, இது எந்த உன்னத நோக்கத்தாலும் கூறப்படவில்லை, இது அவரது சகோதரரை போன்று அவருக்கும் விழிப்புணர்வு இல்லாமமையை எடுத்துக்காட்டுகிறது இனிமேல் தான் அரசியல் சர்க்கஸ் தொடங்க உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.