தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் நன்கொடை வசூலிக்க கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில் நன்கொடை வசூலிக்க கூடாது என உத்திரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை உத்தரவை மீறி பள்ளிகள் நன்கொடை வசூலிப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் சில தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என பெற்றோர்கள் போட்டி போடுவதால் அப்பள்ளிகள் நன்கொடை வசூலிப்பதாக பல புகார்கள் வந்துள்ளது. இதன் காரணமாகத்தான் பள்ளிக் கல்வித்துறை தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிக்க கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் பள்ளிகள் நன்கொடை வசூலிக்கும் பட்சத்தில் அதிகாரிகள் நடவடிக்கை ஏற்பாடுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.