ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக வெற்றிகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது உரையில், பாஜக அரசு மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருவதால், எதிர்க்கட்சிகளான அவர்கள் மக்களின் ஆதரவுடன் முன்பே சென்று தடுப்பதாக கூறினார். இதனால், மோடி அரசின் பல நடவடிக்கைகளில் யூ-டர்ன் எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

காஷ்மீரின் யூனியன் பிரதேச நிலைபாடு குறித்து அவர் கண்டனம் தெரிவித்தார். வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக தரம் தாழ்த்தப்பட்டுள்ளதை இவர் சுட்டிக்காட்டினார். மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதையிட்டு வருத்தம் தெரிவித்த ராகுல், காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதே காங்கிரஸ் கட்சியின் முதன்மையான கோரிக்கையாக இருப்பதாக வலியுறுத்தினார்.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் வெறுப்பு மற்றும் வன்முறையை ஊக்குவிப்பதாக ராகுல் குற்றம் சாட்டினார். அதற்கு மாறாக, காங்கிரஸ் கூட்டணி அன்பை ஊக்குவிப்பதாகவும், அவர்கள் நடத்திய பயணம் இந்த செய்தியையே மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.