திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் சொரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முத்துராஜ் பொக்லைன் டிரைவராக இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏராளமான வரன்கள் பார்த்தும் முத்துராஜுக்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துராஜ் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.