தென்காசி மாவட்டத்தில் உள்ள காசிதர்மம் புதுமனை தெருவில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த அப்ரானந்தம் மகளை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் அப்ரானந்தம் தனது மகளை வீட்டிற்கு அழைத்து சென்றார். இதனால் கோபமடைந்த மகேந்திரன் தனது மாமனாரின் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் மகேந்திரனை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.