கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியில் வசிக்கும் செல்வ சித்ரா என்பவர் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் லஞ்சம் வழங்குவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது. நேற்று லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையிலான போலீசார் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைந்து அதிகாரிகளின் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச் போன்ற பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் அதிகாரிகள் செல்வ சித்ராவின் பையில் இருந்த கணக்கில் வராத 17,853 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அதிகாரி மீது குவிந்த புகார்கள்…. கணக்கில் வராத பணம் பறிமுதல்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!
Related Posts
திருமணம் முடிந்து 20 நாள்தான் ஆகுது….. கணவனுடன் சென்ற பெண்…..சக்கரத்தில் சேலை சிக்கி விபத்தில் பலியான சோகம்….!!
திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் பகுதியில் அக்பர் அலி-அலிமா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அக்பர் அலி ஓய்வு பெற்ற ஆசிரியராக இருக்கும் நிலையில் அவருடைய மனைவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மூத்த மகள் அனீஸ் (25) என்பவருக்கு முகமது இம்ரான்…
Read moreநெல்லையில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர்… 5 ஆண்டு சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிராஞ்சேரி கீழத்தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (31). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சீதாராமன் மீது முன்னீர்பள்ளம் காவல்…
Read more