விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முறம்பு மவுண்ட் சியோன் பகுதியில் அமலன் சேவுகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமலேயே பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. இதனால் விருதுநகர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் டாக்டர் முருகவேல் தலைமையிலான குழுவினர் அமலனின் மருத்துவமனைக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு அவர் இல்லாததால் சிகிச்சை அளிக்க பயன்படுத்திய ஊசி, மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அமலன் மருத்துவம் படிக்காமல் போலியாக சிகிச்சை அளித்தது உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான அமலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மருத்துவமனையில் திடீர் சோதனை…. தலைமறைவான போலி டாக்டர்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“தாலி கட்டுன அன்னைக்கே ஓடிருவாங்க…” இதுவரை 4,5 திருமணம் செய்து குடும்பத்தையே சீரழித்து…. நிகிதாவின் மோசடி…. பரபரப்பு குற்றச்சாட்டு…!!
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நகையை காணவில்லை என புகார் அளித்த நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.…
Read moreதமிழகத்தை உலுக்கிய அஜித் மரணத்தில் அதிர்ச்சி தகவல்..!! “50 வெளிப்புற காயங்கள், மூளையில் ரத்தக்கசிவு” – பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்தது.!
திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த தனியார் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் மரணமடைந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஜித் உடலில் நடைபெற்ற பிரேத…
Read more