விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முறம்பு மவுண்ட் சியோன் பகுதியில் அமலன் சேவுகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமலேயே பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. இதனால் விருதுநகர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் டாக்டர் முருகவேல் தலைமையிலான குழுவினர் அமலனின் மருத்துவமனைக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு அவர் இல்லாததால் சிகிச்சை அளிக்க பயன்படுத்திய ஊசி, மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அமலன் மருத்துவம் படிக்காமல் போலியாக சிகிச்சை அளித்தது உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான அமலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மருத்துவமனையில் திடீர் சோதனை…. தலைமறைவான போலி டாக்டர்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
பயங்கர அதிர்ச்சி..! 5 பழங்குடியின மாணவிகள் பாலியல் பலாத்காரம்… பெட்டிக்கடைக்காரர் கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் உமேஸ்வரன் என்ற 26 வயது பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு பெட்டிக்கடை நடத்தி வரும் நிலையில் திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் தனியாக வசித்து…
Read more“தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்….” கர்ப்பமாக்கி கைவிட்ட திருமணமான வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!
விழுப்புரம் மாவட்டம் சேரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (32), மாற்றுத்திறனாளி பெண். தாயை இழந்த சத்யா, தனது தந்தையுடன் வசித்து வருகிறார். திருமணமாகாமல் 30 வயதைக் கடந்தும் தனிமையில் இருந்த சத்யா, மனஉளைச்சலில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே…
Read more