திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் முத்துசாமி(31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா(25) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முத்துசாமி தனது மனைவியை சரமாரியாக தாக்கினார். அப்போது அங்கு வந்த சூர்யாவின் தாய் மகாலட்சுமி தனது மருமகனை தடுக்க முயன்றார்.

அப்போது கோபத்தில் முத்துசாமி கத்தியால் தனது மாமியாரை சரமாரியாக குத்தினார். இதனால் படுகாயமடைந்த மகாலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முத்துசாமியை கைது செய்தனர்.