பொதுவாக ஜூஸ் கடைகள், உணவு விடுதிகள், இளநீர் கடைகளில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அந்த பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்களால் சுற்றுப்புற பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனை பொதுமக்கள் கண்ட இடங்களில் தூக்கி எறிவதால் மண்வளம் பாதிக்கப்படுவதாகவும் உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் மழை காலங்களில் அவை மண்ணுக்குள் புதைந்து விடுவதால் கண்டறிய முடியாமல் மண்ணோடு மண்ணாக கலந்து விடுகிறது. மேலும் அவற்றிற்கு மக்கும் தன்மை இல்லை என்பதால் மண்ணின் தரத்தையும் கெடுக்கிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கும் பரவலாக பாதிப்பு ஏற்படுகிறது.

அதன் காரணமாக இனி ஜூஸ் கடைகள், இளநீர் கடைகளில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக பேப்பர் ஸ்ட்ரா அல்லது சில்வர் ஸ்ட்ராக்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீறி பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்களை பயன்படுத்தினால் கடையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.