அசாம் மாநிலம் கவுஹாத்தி பகுதியிலிருந்து இண்டிகோ விமானம் கடந்த வியாழக்கிழமை சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 168 பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் விமானம் பறந்து கொண்டிருந்த நேரத்தில் எரிபொருள் தீர்ந்ததால் விமானி விமான கட்டுப்பாட்டு அறைக்கு  May Day அறிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு, விமானத்தை இயக்க முடியாத நிலைக்கு செல்லுதல் போன்றவை ஏற்பட்டால் மட்டுமே விமான கட்டுப்பாட்டை அறைக்கு  May Day என்று தகவல் கொடுப்பார்கள். அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்திலிருந்து விமானி கட்டுப்பாட்டு அறைக்கு  May Day என்று தகவல் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து பெங்களூரு விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு அபாய அழைப்பு வந்தது. அதற்காக விமான ஊழியர்கள் மருத்துவக்குழு மற்றும் தீயணைப்பு படை வீரர்களுடன் பாதுகாப்பிறகான ஏற்பாடுகள் செய்தனர். பின்னர் இண்டிகோ விமானம் இரவு 8:20 மணி அளவில் பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையரங்கிய நிலையில் விமானத்திலிருந்த பயணிகள் பத்திரமாக தரையிறங்கினர்.