
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் இரு படங்களில் நடிப்பதற்கு முன்பணம் வாங்கிக்கொண்டு அந்த படங்களில் நடிக்கவில்லை என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் நடிகர் தனுஷ் நடிக்கும் படங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்த நிலையில் தனுஷை வைத்து படம் இயக்குவதற்கு முன்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தை கண்டிப்பாக கலந்தாலோசனை செய்ய வேண்டும் என அறிவித்தது.
இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் தனுஷ் முறையிட்ட நிலையில் ஒரு படத்திற்கு தான் வாங்கிய 3 கோடி முன்பனத்தை இரு மடங்காக அதாவது ரூ.6 கோடியாக திருப்பிக் கொடுக்க தயாராக இருக்கிறேன் எனவும், ஆனால் அவர்கள் 15 கோடி கேட்பதாகவும் புகார் கொடுத்திருந்தார். அதோடு மற்றொரு படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாகவும் தனுஷ் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நடிகர் சங்கம் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது தனுஷ் நடிக்கும் படங்களுக்கு தடை விதித்ததை தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்ப பெற்றுள்ளது. மேலும் பெப்சி மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.