கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் நேற்று சந்தை நாள் என்பதால் எஸ்டேட் பகுதிகளில் இருந்து ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளனர். நேற்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மார்க்கெட் பகுதியில் நடைபாதை படிக்கட்டு மற்றும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். மேலும் மழைநீர் கடைகளுக்குள் புகுந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டு வியாபாரிகள் வேதனை அடைந்தனர். இதே போல் வால்பாறையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகளும் மழை பெய்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.
வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழை….. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!
Related Posts
அரைகுறை ஆடையில் அலப்பறை… பெண்கள் அலறியடித்து ஓட்டம்… ரகளை செய்த மதுப்பிரியர்…!!
மதுப்பிரியர் ரகளை செய்ததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலை செல்லும் வழியில் சாமுண்டி தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் மதுபிரியர் ரகளையில் ஈடுபட்டார். இந்நிலையில் அந்த நபர் போக்குவரத்து காவலர்கள் நிற்கும் குடையின் கீழ் உட்கார்ந்து…
Read more8 ஆண்டுகளாக அலைகழிக்கப்பட்ட முதியவர்…. அரசு ஊழியருக்கு அடிக்க உரிமை இருக்கா….? வைரலாகும் வீடியோ…!!
நெல்லை மாவட்டம் மானூர் கல்குடி கிராமத்தில் ஒரு முதியவர் வசித்து வருகிறார். இவர் தங்கள் பகுதியில் மின்கம்பம் கேட்டு விண்ணப்பித்தார். தங்கள் இடத்திற்கு மின்கம்பம் கேட்டு முறையிட்ட முதியவரை மின்வாரிய அதிகாரிகள் 8 ஆண்டுகளாக அலைக்கழித்துள்ளர். இதுதொடர்பாக மானூர் துணை மின்வாரிய…
Read more