இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் தோட்டத்தின் வழியே தனது நாயுடன் செல்கிறார். அந்த சிறுமி தனது கையில் ஒரு சிறிய மம்முட்டியை வைத்துக்கொண்டு தோட்டத்தின் வழியே செல்கிறார். அவரது பின்னால் குட்டி நாய் ஒன்று வருகிறது. சிறிது தூரம் சென்ற பிறகு நாய் எங்கே என்று பின்னால் திரும்பி பார்க்கிறார்.

ஆனால் நாய் அங்கில்லை. அதற்குள் அந்த நாய் சிறுமியின் முன்னாள் வந்துவிட்டது. முன்னாள் வந்த நாய் சிறுமியை எங்கே என்று தேடுகிறது. இவர்கள் இருவரும் மாறி மாறி எங்கே என்று தேடுகிறார்கள். அதன் பின் சிறுமி முன்னே பார்க்கிறார். அப்போது அந்த நாய் நிற்கிறது. அதன் பின் மீண்டும் இருவரும் நடந்து செல்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.