
திருப்பூர் மாவட்டத்தில் தில்லை ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் டெலிகிராம் மூலம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என்று மோசடி கும்பல் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிய தில்லைராஜன் டெலிகிராம் செயலியில் அனுப்பப்பட்ட வங்கி கணக்கு பல தவணைகளில் ரூ.19 லட்சம் தொகையை செலுத்தியுள்ளனர். அதன் பின் அந்த பணத்தை திரும்ப எடுக்க முயற்சி செய்யும்போது அவரால் முடியவில்லை.
அதாவது லாபத் தொகையுடன் பணத்தை எடுக்க முயன்ற போது வரி மற்றும் காப்பீட்டுத் தொகையாக கூடுதல் பணத்தை செலுத்தினால் தான் பணத்தை எடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த தில்லை ராஜன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அடித்தார்.
அதன்படி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மோசடி கும்பல்கள் கேரளாவைச் சேர்ந்த முனாஸ்(38), விபின்தாஸ்(35) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.