தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, எங்கள் கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது முருகன் மாநாடு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார். மேலும் அவர் கூறியதாவது, எங்கள் கூட்டணி உறுதியானது, இறுதியானது.

இதனை சிதைக்க வேண்டும் என்பதில் சிலர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அது நிச்சயம் நடக்காது. மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயிக்கப் போகும் கட்சியின் பக்கம் தான் எல்லோரும் வருவார்கள். எனவே பாஜக கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம் என்று கூறினார்.