
கேரளாவில் ஆர்யானந்த் என்ற ஊரின் பஞ்சாயத்து உறுப்பினருக்கும் இளப்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் பஞ்சாயத்து உறுப்பினர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மாப்பிள்ளை அப்பெண்ணின் பையை சோதனை செய்தார். அதில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்தது.
அதாவது இவர் வயதான ஆண்களை குறி வைத்து பல பேருடன் அவருக்கு திருமணமாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் மணப்பெண்ணை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது.