கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமலிங்கம் லட்சுமி நகரில் இருக்கும் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடையில் திடீரென சோதனை செய்தனர்.
தற்போது தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டை பதுங்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் கடை உரிமையாளரான ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.