திருப்பூர் மாவட்டத்திலுள்ள விளாமரத்தப்பட்டியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். நேற்று தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கணபதி தோட்டத்திற்கு சென்றார். இந்நிலையில் கிணற்றில் தண்ணீர் எவ்வளவு உள்ளது என எட்டிப் பார்த்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கணபதி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றுள் இறங்கி கயிறு கட்டி கணபதியை பத்திரமாக மீட்டனர்.
கிணற்றுள் தவறி விழுந்த முதியவர்…. கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
Related Posts
காதலனோடு சேர்ந்து தீக்குளிப்பு…. இறுதியில் நேர்ந்த சோகம்…. காதலி அதிர்ச்சி வாக்குமூலம்…!!
மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி இளம் பெண் சிந்துஜா தன் மீதும் மற்றும் தனது காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி…
Read moreBreaking: தூத்துக்குடி மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை….!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 22ஆம் தேதி வைகாசி விசாகம் விமர்சையாக நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வருகை புரிவார்கள். இதன் காரணமாக வருகின்ற…
Read more