சேலம் மாவட்டத்தில் உள்ள டவுன் மேட்டு மக்கான் தெருவில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக வடிவேலின் மனைவி கலைமணி உயிரிழந்தார். இதனால் வடிவேல் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று மதியம் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் வடிவேல் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.