
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு முழுவதும் நம்ம கிட்ட மிடுக்கா இருந்த காவல்துறை, இன்றைக்கு வெட்கி தலை குனிந்து… ஏன்டா காக்கி சட்டை போட்டோம்… இந்த விடியாத அரசில் என்ற நிலைமையில் வேதனைக்கு தள்ளப்பட்டு… இன்றைக்கு அடிவாங்குற காவல்துறையாக மாறிட்டு.இன்னைக்கு அதான் மிகவும் வேதனைக்குரிய விஷயமா இருக்கு.
மாநகராட்சி ஆணையர் கிட்ட கையை நீட்டி பேசி மாமுல் கேட்ட கட்சிக்காரங்க மேல நடவடிக்கை எடுத்துட்டாங்களா..? ஒன்னும் எடுக்கலையே. அதேபோல எத்தனை பேர் கட்சி காரங்க இன்னைக்கு தமிழ்நாட்டுல பாத்தீங்கன்னா… காவல்துறையை மிரட்டுவது… வருவாய் வட்டாட்சியரை மிரட்டுவது…. அதிகாரிகளை மிரட்டுவது… பொதுமக்களை மிரட்டுவது… கட்டப்பஞ்சாயத்து பண்ணுவது இதெல்லாம் வழக்கமாகிவிட்டது.
அதெல்லாம் ஒரு கட்டுக்குள் கொண்டு வரணும்னா… ஒரு கடுமையான நடவடிக்கை …சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் தான் கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால் அது மாதிரி நடவடிக்கைகள் இந்த விடியாத திமுக அரசின் உடைய முதலமைச்சர் ஸ்டாலின் எடுதாரா ? ஒரு கட்சிக்காரங்க மேல நடவடிக்கை எடுத்தாரா? அப்ப என்ன அர்த்தம்… ஊக்கப்படுத்துறாரு என தெரிவித்தார்.