உத்தரகாண்டில் ஹால்ட்வானி என்ற பகுதியில் ஒரு பெரிய கால்வாய் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த வழியாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்தக் காரில் மொத்தம் 7 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கால்வாய்க்குள் விழுந்த கார் தலைகீழாக விழ, கால்வாயில் நீர் வேகம் அதிகமாக இருப்பதால் காரில் நீர் வேகமாக நிரம்பி உள்ளது.

 

மேலும் வேகமாக சென்ற நீரில் இருந்து காரை எடுப்பதற்கு சிறிது தாமதம் ஆகிவிட்டது. இதனால் காரில் இருந்த ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பிறந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு செல்லும் போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.