மத்திய பிரதேச மாநிலம் உமாரியா என்னும் பகுதியில் சகுன் யாதவ்(26) வயதான பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் திடீரென தனது மகனோடு கிணற்றில் குறித்து தற்கொலை செய்துள்ளார். இதைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் கிணற்றுக்குள் குதித்து அவர்களை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அருகில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், பெண்ணின் கணவன் மற்றும் மாமியார் இருவரும் அவரை துன்புறுத்தியதாக பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர். மேலும் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தவுடன் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.