
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ராஜேந்திரன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வீரமுத்து (30) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 31ம் தேதி பெரியகுளத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, தேனியை நோக்கி வந்த சரக்கு வாகனம் ஒன்று பைக்கின் மீது மோதியது.
இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்த சரக்கு வாகன ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பிய ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.