
நார்வேவில் நடைபெற்று வரும் செஸ் 2025 போட்டியில் இந்தியாவின் 19 வயது கிராண்ட் மாஸ்டர் டி. குகேஷ், உலக நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பெரும் வெற்றியை பெற்றார். இந்த போட்டியின் கடைசி நேரத்தில் கார்ல்சன் பெரிய தவறு செய்ததால், குகேஷ் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.
அந்த தோல்வியை தாங்க முடியாமல் கார்ல்சன் மேசையில் கைமுட்டியால் அடித்தார். அவர் அதிர்ச்சியிலும் விரக்தியிலும் இருந்தது அனைவருக்கும் தெரிவது போல இருந்தது.
வெற்றிக்கு பிறகு குகேஷ் மிகவும் அமைதியாக இருந்தார். கார்ல்சன் செய்த தவறை சரியாக பயன்படுத்தி, கடைசி வரை உறுதியுடன் விளையாடினார்.
“இந்த வெற்றியில் என்ன முக்கியம்னு கேட்டீங்கனா, நான் நல்ல ஆட்டம் விளையாடினேன் என்பதுதான். ஆனா, உலக சாம்பியனை வெல்வது எப்போதும் ஒரு பெரிய விஷயம்தான்” என்று குகேஷ் பெருமையாக கூறினார்.
Indian Grandmaster Gukesh defeated World Champion Magnus Carlsen in the early hours of June 2 at Norway Chess 2025, marking one of the most memorable moments in chess this year.
Vc: @NorwayChess #GukeshD #MagnusCarlsen #NorwayChess2025 #ChessHistory #IndianChess #ChessMoment pic.twitter.com/hKW7St3Smi
— Mid Day (@mid_day) June 2, 2025
அந்த வெற்றியால், குகேஷ் புள்ளி கணக்கில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் தற்போது 8.5 புள்ளிகளுடன், கார்ல்சன் மற்றும் ஃபேபியானோ கருவானாவை பின்தொடர்கிறார்.
கடந்த வாரம் இதே போட்டியில் கார்ல்சன், குகேஷை வீழ்த்தியிருந்தாலும், இந்த வாரம் நிலைமையே மாறி விட்டது. இந்த வெற்றியால், குகேஷின் திறமையும், உலக தரத்தில் அவர் காட்டும் வளர்ச்சியும் தெளிவாக உள்ளதை நிரூபிக்கிறது.
மேலும் கார்ல்சன் தனது சமூக ஊடகப் பதிவில் குரேஷை பாராட்டும் விதமாக வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில்”நீங்கள் ராஜாவை நோக்கி வருகிறீர்கள் நீங்கள் தவறவிடக்கூடாது” என கூறியுள்ளார்.