
கர்நாடகாவில் பயணப்படுத்தப்படும் பாராசிட்டமால் உட்பட 15 வகையான மருந்துகளுக்கு அம்மாநில அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில மருந்து பரிசோதனை கூடத்தின் ஆய்வில், இந்தப் பொருள்கள் எல்லாம் தரம் அற்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாநில சுகாதாரத் துறை மந்திரி பிறப்பித்தார்.
மேலும் இந்த தடை செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே போன்று மக்களும் இந்த பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார் இந்த மருந்துகள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதாலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.