இமாச்சலப் பிரதேசம் சோலன் மாவட்டத்திலுள்ள ஹோல்கி கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் பேஸ்புக்கில்  நேரலை வீடியோ மூலம் பேசினார். அதில்   “நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்…இதற்கு யாரும் காரணம் கிடையாது…” என்று கண்ணீருடன் கூறியுள்ளார். இவரது நேரலை வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இந்த தகவல் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வீடியோ மூலம் அந்தப் பெண்ணின் இருப்பிடத்தை அறிந்த நிலையில் உடனடியாக அங்கு சென்றனர். இதைத்தொடர்ந்து அந்தப் பெண் வசித்து வரும் பகுதிக்கு அருகே உள்ள சில வியாபாரிகளும் அந்த நேரலை வீடியோவை பார்த்த நிலையில் அவரது அண்ணன் மற்றும் தாய்க்கு தொடர்பு கொண்டு கூறினர்.

அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண்ணின் தாய் மற்றும் அண்ணன் வீட்டிற்கு விரைந்து சென்ற நிலையில் அந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்ததும் கதறி அழுதனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.