உலக பணக்காரரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களை தயார் செய்து வருகிறது. மேலும் டிரைவர் இல்லாமல் சுயமாக இயங்கும் ரோபோ டாக்ஸி கார்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் வருகிற 22ஆம் தேதி பொதுமக்கள் பயன்படுத்த இந்த ரோபோ டாக்சி அறிமுகப்படுத்தப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது, டெஸ்லா நிறுவனத்தின் சுய ஓட்டுனர் ரோபோ டாக்ஸியில் பொதுமக்களுக்கு சவாரிகளை வழங்க 22ஆம் தேதி முதல் தற்காலிகமாக வழங்க திட்டமிட்டுள்ளோம்.

ரோபோ டாக்ஸி அறிமுகம் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் நடைபெறும் என்று கூறினார். மேலும் அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில் அந்த ரோபோ டாக்ஸி கார் டிரைவர் இல்லாமல் திரும்புகிறது. அந்த காரில் ரோபோடாக்சி என்று எழுதப்பட்டிருந்தது. இந்த கார்களில் முழு சுய ஓட்டுனர் என்ற டெஸ்லாவின் மேம்பட்ட ஓட்டுனர் உதவி மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. முன்னதாக டெஸ்லா நிறுவனம் தனது சுய ஓட்டுனர் வாகனங்களை ஆஸ்டினில் உள்ள சாலைகளில் சோதித்து வந்தது குறிப்பிடத்தக்கது.