
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை கடந்த 8-ம் தேதி சென்னைக்கு வந்த பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த புதிய ஒருங்கிணைந்த முனையம் நேற்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய பன்னாட்டு நிலையம் இந்திய தமிழ்நாட்டு கலாச்சாரம், புராதான சின்னங்கள், பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளிட்ட புராதான சின்னங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த புதிய முனையத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் பயணிகளுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு சோதனைக்காக 100 கவுண்டர்கள், குடியுரிமை சோதனைக்காக 108 கவுண்டர்கள், பயணிகளின் உடைமைகள் வரும் 6 கன்வெயர் பெல்ட்டுகள், உடைமைகளை பரிசோதனை செய்ய 3 அதிநவீன கருவிகள் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு விமான நிலைய ஓடுபாதை மற்றும் விமானம் நிறுத்தும் இடம் போன்றவைகளும் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்திற்கு அண்ணா ஒருங்கிணைந்த முனையம் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஓடுபாதையில் விமானம் காத்திருக்கும் நேரங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று இந்த புதிய முனையத்திலிருந்து முதல் விமானமாக வங்காளதேச தலைநகர் டாக்காவில் இருந்து பங்களா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியது.