
மதுரை மாவட்டத்தில் உள்ள பாண்டிக்கோயில் அருகே நடத்தப்பட்ட முருகர் பக்தர்கள் மாநாடு நிகழ்ச்சியில் பிள்ளையார் கோவில் உடைப்பு போராட்டம் மற்றும் தந்தை பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சிப்பது போன்ற வீடியோவை இந்து முன்னணி கட்சி வெளியிட்டது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், பகுத்தறிவு சிந்தனைகளை பட்டித்தொட்டி எங்கும் எடுத்துச் சென்ற மிகப்பெரிய சீர்திருத்தவாதி தந்தை பெரியார். மேலும் திராவிட சித்தாந்தத்தை முன்னிறுத்தி தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் பேரறிஞர் அண்ணா.
அதோடு மட்டுமல்லாமல் தமிழக மக்களால் போற்றப்படும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் மதிக்கப்பட்ட போற்றப்பட்ட தலைவர் தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் வழி பின்பற்றி வருபவர்கள் நாங்கள்.
அப்படிப்பட்ட அரசியல் வரலாற்று புரட்சியை உருவாக்கிய இரு பெரும் தலைவர்களை விமர்சித்து முருக பக்தர்கள் மாநாடு என கூறி இந்து முன்னணி கட்சி வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.