
முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குறித்த செய்திகளை ஒளிபரப்ப பாகிஸ்தான் தகவல் தொலைத்தொடர்பு துறை தடைவிதித்துள்ளது. ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இம்ரான்கான் பேசி வருவதால், அவர் குறித்த செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தடையை மீறி அவரது பேச்சை ஒளிபரப்பு செய்ததால் பிரபல தனியார் செய்தி நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்த தடை உத்தரவால் பாகிஸ்தான் ஊடகங்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.