மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் இதனை கண்டித்து மும்பை முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. அதாவது பத்லாபூர் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமிகள் 2 பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் இதனை கண்டித்து நாடும் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த வழக்கில் அக்ஷய் ஷிண்டே (23) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். இவரை காவல்துறையினர் நேற்று விசாரணைக்காக அழைத்து சென்றனர். இவர்களுடைய வாகனம் நேற்று மாலை சுமார் 6:30 மணியளவில் மும்பை தேசிய நெடுஞ்சாலையை நெருங்கும் போது திடீரென குற்றவாளி கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கி எடுத்து சுட ஆரம்பித்தார்.

இதில் ஒரு காவலருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவரை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலியல் குற்றவாளி நடு ரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன் என்பது அதற்கு தற்போது மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, அக்சய்‌ ஷிண்டே மீது அவருடைய முன்னாள் மனைவி பாலியல் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் அழைத்து சென்ற நிலையில் போலீசாரை தாக்குவதற்கு முயற்சி செய்தார். அவரால் காயம் அடைந்த காவலர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தற்காப்புக்காக போலீசார் அவரை சுட்டதில் மரணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.