
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த மேட்ச்சில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்த நிலையில் தோனி கடைசி ஓவரின் 3-வது பந்தை எதிர்கொண்டார். அப்போது அவர் டீப் கவர் திசையில் பந்தை அடித்து விட்டு ஓட மறுத்தார். அதற்குள் எதிரணியில் இருந்த டேரில் மிட்செல் தோனி பக்கம் கிரீசை தொட்டார். அப்போது அவர் வேண்டாம் என்று கூறியதால் மறுமுனைக்கும் ஓடி வந்தவுடன் ரன் அவுட்டில் இருந்தும் தப்பினார்.
அதாவது தோனி உடனடியாக ஓடியிருந்தால் 2 ரன்கள் கிடைத்திருக்கும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, அந்தப் பந்தில் தோனி ரன் எடுக்க மறுத்தது தவறு. கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு என்பதால் அதில் இந்த மாதிரி செய்யக்கூடாது. எதிர்முனையில் நின்ற டேரில் மிட்செல் ஒரு சர்வதேச வீரர். ஒருவேளை அவர் பவுலராக இருந்திருந்தால் பேட்ஸ்மேனின் நிலைமையை என்னால் புரிந்திருக்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த போட்டியில் தோனி 14 ரன்களில் ரன் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.